''அன்புமணியால் பதவி இல்லாமல் இருக்க முடியாது!''
அதிரடி கிளப்பும் பா.ம.க. அதிருப்தியாளர்கள்
பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் காவேரியும் காமராஜும், தங்கள் ஆதர வாளர்களுடன் ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு நாள் குறிக்க, அவர்களுக்குப் போட்டியாக அதற்கு முதல் நாள் பா.ம.க. சார்பில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டப் பொதுக் குழு கூட்டத்தை நடத்தினார்கள்.
கடந்த 25-ம் தேதி மேச்சேரியில் நடந்த கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலத் தலைவரான கோ.க.மணிதான் தலைமை தாங்குவார் என சொல்லப்பட்டது. ஆனால், மணி வரவில்லை. மாநில துணைப் பொதுச் செயலாளரான ஓமலூர் தமிழரசு, கூட்டத்தை வழி நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு ஓமலூர் தமிழரசுவிடம் பேசினோம். ''தனக்குத் திரும்பவும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் காவேரி சொல்லிட்டு இருக்கார். மருத்துவர் ஐயாவை யாருமே பார்க்க முடியாதுன்னு காவேரி சொல்றது வடி கட்டிய பொய். தைலாபுரம் தோட்டத்துக்கு எங்க எல்லோரையும்விட காவேரிதான் செல்லப்பிள்ளை. அவரோட இரண்டாவது மகன் கல்யாணத்தை, 'எனக்கு குல தெய்வமே தைலாபுரத்தில்தான் இருக்குது. அதனால், என் பையன் கல்யாணத்தை அங்கேதான் நடத்துவேன்’னு சொல்லி தைலாபுரம் தோட்டத்துக்குத் தன் மகனை கூட்டிட்டுப் போய் மருத்துவர் ஐயா முன்னாடி தாலி கட்ட வெச்சார். வாரிசு அரசியல்னு சொல்றாரே... தி.மு.க-வில் வாரிசு அரசியல் இல்லையா..? காங்கிரஸில் இல்லையா..? சின்னய்யாவை நாங்க எல்லோரும் கட்டாயப் படுத்தித்தான் கட்சிக்குள் கொண்டு வந்தோம்.
வன்னியர் சங்கம் என்ற பெயரில் நாளைக்கு காவேரியும் காமராஜும் சேர்ந்து கூட்டம் போடு றாங்க. மக்கள் யாரும் தெரியாத்தனமா அங்கே போயிடக் கூடாதுன்னுதான் இன்னிக்கு நாங்க கூட்டம் போட்டோம். பா.ம.க. தொண்டன் ஒருத்தன்கூட அவங்ககூட போக மாட்டான். இதைத்தான் கூட்டத்தில் பேசினோம்...''என்றார்.
காவேரி தலைமையிலான பா.ம.க. எதிர்ப்பாளர் கள் கூட்டம், அதே மேச்சேரியில் 26-ம் தேதி நடந்தது. சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கூடியி ருக்க, நிர்வாகிகள் சிலருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், ''மேட்டூரிலும் பென்னாகரத்திலும் தன்னுடைய குடும்பத்தைத் தவிர வேற யாரும் எம்.எல்.ஏ. ஆகிடக் கூடாதுன்னு கோ.க.மணி நினைக்கிறார். மணியோட பையன் தமிழ்க்குமரனுக்கு எதிராக யாரும் இந்தப் பகுதியில் வளர்ந்துடக் கூடாது என்ப தில் கவனமா இருக்கார். என்னைப் போன்றவர்கள் இருந்தால் பிரச்னை என்பதால்தான், என்னைக் கட்சியைவிட்டு நீக்கி இருக்காங்க. இதை எல்லாம் ராமதாஸ்கிட்ட சொன்னாலும், அவர் கேட்க மாட் டார். மணியைப்பத்தி ராமதாஸ்கிட்ட ஒரு வக்கீல் புகார் பண்ணினார். மறுநாள் அந்த வக்கீலுக்கே மணி போன் பண்ணி, 'ராமதாஸே நினைச்சாலும் என்னை கட்சியைவிட்டு நீக்க முடியாது!’ன்னு சிரிச்சாராம். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்துல இத்தனை வருஷத்தை வீணடிச்சுட்டோமேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு...'' என்று வேதனையைக் கொட்டினார்.
ஒரு காலத்தில் நீங்க, 'நானோ, என் மகனோ சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ கால்வைக்க மாட்டோம்’ என்று சத்தியம் செய் தீர்கள். நீங்கள் ஒரு சத்ரியன். சத்ரியன் எப்போதும் பொய் பேச மாட்டான். நீங்கள் பொய்யும் பேசி விட்டீர்கள், வாக்கும் தவறிவிட்டீர்கள். இது மன்னிக்க முடியாத குற்றம்!
அன்புமணியால் பதவி இல்லாமல் இருக்க முடியாது. ஏன் அப்படி பதவி வேண்டும் என்றால், போட்டியிட்டு ஜெயிக்க வேண்டியதுதானே? ஏன் எப்போதும் பிளஸ் ஒன் கேட்டு வாங்குகிறீர்கள்? மணி போன்ற ஆட்களைத் தலைவராக வைத்திருக்கும் வரை, பா.ம.க. எந்தக் காலத்திலும் தலை தூக்கவே முடியாது. நமக்குன்னு ஒரு கொடி விரைவில் வரும். அதுவரை எந்த கரை வேஷ்டி கட்டுவதுன்னு உங்க எல்லோருக்கும் ஒரு குழப்பம் வரும். இளைஞர்களாக இருப்பவர்கள் பேன்ட் சட்டை அணியுங்கள். மத்தவங்க எந்த கரையும் இல்லாத சாதாரண கதர் வேட்டி அணியுங்கள். இந்தக் குழப்பத்துக்கு எல்லாம் விரைவில் விடையும் கொடியும் கிடைக்கும்!'' என்று பேசிக் கைதட்டல் வாங்கினார்.
அதிருப்தியில் இருக்கும் பா.ம.க-வினரை அரவணைக்கும் முயற்சியில் அ.தி.மு.க-வும், தே.மு.தி.க-வும் களம் இறங்கி இருப்பதால், இன்னமும் நிறையத் திருப்பங்கள் வரலாம்!
- கே.ராஜாதிருவேங்கடம்
No comments:
Post a Comment